×

ஆர்.எஸ்.மங்கலத்தில் துணிக்கடையில் தீ விபத்து: ரூ.6 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்

 

ஆர்.எஸ்.மங்கலம், ஏப். 10: ஆர்.எஸ்.மங்கலத்தில் மின்கசிவால் துணிக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.6 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் பள்ளிவாசல் அருகே ஹைதர் வளைவு என்ற இடத்தில் சீனிபுலவர் என்பவருக்கு சொந்தமான கட்டடத்தில் ஜலீல் முகமது என்பவரது மகள் தஸ்லீம் பெண்களுக்கான ரெடிமேட் உள்ளாடை, துணிக்கடை நடத்தி வருகிறார். நேற்று கடையில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக துணிக்கடை தீப்பிடித்து எரிந்தது.

உடனடியாக அக்கம் பக்கத்தினர் ஆர்.எஸ்.மங்கலத்தில் உள்ள தீயணைப்புதுறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் போராடி தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் கடையில் இருந்த மொத்த பொருட்களும் தீயில் எரிந்து நாசமானது. இதன் மதிப்பு சுமார் ரூ.6 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமானதாக கூறப்படுகிறது. மேலும் இச்சம்பவம் குறித்து ஜலீல் முகமது கொடுத்த புகாரின் பேரில் ஆர்.எஸ்.மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post ஆர்.எஸ்.மங்கலத்தில் துணிக்கடையில் தீ விபத்து: ரூ.6 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம் appeared first on Dinakaran.

Tags : RS Mangalam ,Ramanathapuram district ,R.S. Mangalam ,Seenipulavar ,Haider ,
× RELATED இன்ஸ்டா பழக்கம் விபரீதத்தில்...